January 27, 2007

தொலைந்த தொப்புள் கொடி..

உறவுகள் தேடி
ஓடாய் தேய்த - ஒரு
உயிரின் ஓளமிது..

தொப்புள் கொடியை
தொலைத்த முதலே
தொலைவில் தெரியும்
தொலைந்த விடியலை - தேடும்
தோய்ந்த உயிரிது...

அம்மா என்றேன்
அம்மாவிடம் அல்ல
ஜய்யா என்றேன்
அப்பாவிடம் அல்ல
அண்ணா என்றேன்
அண்ணன் அங்கில்லை
அக்கா என்றேன்
அவளும் சொந்தமில்லை...

இருந்தும்
சில நொடி உறவுகள் -எனை
மெல்ல திண்ணத் துடிக்கும்
வயிற்று பசிக்காக....

பால் சோறு உண்டதில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
படுத்துறங்க தோளுமில்லை
விடைக்கான வழியுமில்லை
விடிந்தாலும்- எனக்கு
விடியலில்லை...

எஞ்சிய சோறும்
எச்சில் இலையும்
எப்போதும் எனக்காய்
எங்கேயும் காத்திருக்கவில்லை....

இவற்றை நம்பியே
இரவல் உயிரை
இன்னமும் வாழவைகிறேன்...

மாமனில்லை
மதனி இல்லை
தாத்தா பாட்டி
பார்த்ததில்லை....

இன்னும் கிடைக்காத
உறவுகளுக்கு
தெரியாத பெயர்கள்....

தாய்முகம் பார்ததில்லை
தாய்மொழியும் அறிந்ததில்லை
தகப்பனார் தெரியவில்லை
தாகம் தான் திறவில்லை...

அனாதை தனிமைக்குள்
அரசாலும் ராஜாவாய்
அண்ணமிட்ட ஆன்மாக்கள்
அன்றைய உறவுகளாய்..

குப்பை தொட்டிகள்
கோயில் மதில் சுவர்கள்
யாருமற்ற மணல் மேடுகள்
இவைகள்-
பெற்றெடுத்த
சிற்றரசர்கள்
சில்லறைக்காக - இன்னமும்
சிணுங்கிக்கொண்டு தான்
சீருகிறார்கள்....

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...

உன்னையும் தான்...

4 comments:

Jazeela said...

அழகான பாகுபாடுக் கொண்ட கவிதை. பிழைகள் நீக்கி பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
///

இவ்வரிகள் நன்றாக உள்ளது

Anonymous said...

///
ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
///

இவ்வரிகள் நன்றாக உள்ளது

Anonymous said...

really good