உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை
தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் - நீ !
December 20, 2006
December 19, 2006
சூட மலர்ந்தது நிலா
என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..
அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..
இதைவிட சிறப்பாய்..
Posted by THOTTARAYASWAMY.A at 6:53 PM 0 comments
Labels: கவிதை
December 18, 2006
இவைகளுக்காய்
நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..
ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..
முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...
இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..
Posted by THOTTARAYASWAMY.A at 8:22 PM 1 comments
Labels: கவிதை
அடைக்கும் தாள்
இப்போது-
இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு...
காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..
இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..
Posted by THOTTARAYASWAMY.A at 8:04 PM 0 comments
Labels: கவிதை
December 17, 2006
வெறியாட்டம்
வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..
கருவறைக்குள்
கைகலப்பு..
இரட்டையர்களுக்குள்
மேலும்
Posted by THOTTARAYASWAMY.A at 5:33 PM 0 comments
Labels: கவிதை
December 16, 2006
தொடர்விருச்சம்
உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?
உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!
அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்
இப்போது
தேடுகிறேன்
தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!
Posted by THOTTARAYASWAMY.A at 8:18 PM 0 comments
Labels: கவிதை
December 15, 2006
உடைத்துவிடாதே..
என்
கனவு குமிழ்களை
கலையாமல்
அனுப்பிவைகிறேன்..
ரசித்துப்பார்
மறந்தும் கூட
உடைத்துவிடாதே..
உன் உயிர்
அதிலுள்ளது..
Posted by THOTTARAYASWAMY.A at 9:10 PM 0 comments
Labels: கவிதை
December 14, 2006
December 13, 2006
வரம்
Posted by THOTTARAYASWAMY.A at 7:24 PM 0 comments
Labels: கவிதை
December 4, 2006
அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை
அப்போது-
வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.
வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.
இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.
இப்போது-
மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.
Posted by THOTTARAYASWAMY.A at 7:53 PM 2 comments
Labels: கவிதை