December 20, 2006

வேண்டுதல் வேண்டாமை


உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் - நீ !

December 19, 2006

கொஞ்சும் கவிதை


இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான்
மலர்ந்த
தருனங்கள்?

திரவியம் தேடு



சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..

நான் இங்கே..

என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

சூட மலர்ந்தது நிலா


என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..

அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

December 18, 2006

இவைகளுக்காய்

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

அடைக்கும் தாள்


இப்போது-

இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு...

காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..


இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..

December 17, 2006

வெறியாட்டம்



வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..

கருவறைக்குள்
கைகலப்பு..

இரட்டையர்களுக்குள்






மேலும்

wild photos





புண்னகை பூ

நாம் நின்று
பேசிய இடதில்

தேன் குடிக்க
வண்டுகள்
வட்டமிட்டன

நீ சிந்திய
புண்னகை
பூக்களில்..

December 16, 2006

நச்சுபாம்புகள்


காமத்தின்
பசியில்

நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..

தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..

தொடர்விருச்சம்

உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?

உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!

அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்

இப்போது
தேடுகிறேன்

தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!

வ(ர)ராதச்சனை


முத்தசுவையில்
இரத்தவெறி-

தூக்கில்
தொங்கினாள்
புதுபெண்..

December 15, 2006

உடைத்துவிடாதே..


என்
கனவு குமிழ்களை
கலையாமல்
அனுப்பிவைகிறேன்..

ரசித்துப்பார்
மறந்தும் கூட
உடைத்துவிடாதே..

உன் உயிர்
அதிலுள்ளது..

சுவடு


கால்கள்
நான்கிருந்தும்

பயணம்
ஒன்றானதால்

சுவடு
இரண்டானது..
காதலில்!

December 14, 2006

நாம் அமரும் நாற்காலி


உயர்தினை
காதல் தோல்வியில்

உடைந்துபோனதோ?
அஃறினை!

காதலின் பின்விளைவு..


இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்

இலைகளை
உதிர்த்துவிட்டன

நாம்
அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..

பனி


என்மேல்
விழும்
சூரியக்கதிர்களும்
பாரமனது!

பாராமல்?
போகும்- பனி
உன்னால்....

நீயா? நானா?


குளக்கறையில்
நாம்

மீன்களுக்குள்
சண்டை

முதலில்
முத்தமிடுவது
நீயா? நானா?

முடிவிலா


எனக்கும்
உனக்குமான
உறவு!

இரத்தத்தாலும்
தோழா-
சதையாலும்?

ஜன்னல்

எனக்கு
போட்டியாய்
ஒற்றை மலர்
ஜன்னல்
எட்டி பார்கிறது
காதலால்!

December 13, 2006

கருமை


வாழ்க்கையில்
தேடி
வர்ணத்தை
வாரி பூசிக்கொண்டாலும்

கருமை
ஒட்டிக்கொண்டு
கண்சிமிட்டவும்செய்கிறது,,!

காதல்


நீ
நான்
சுற்றி எல்லாம்?

நாம் மட்டும்
தனியே !

குமிழ்கள்


உன்
நினைவு குமிழ்களை
கனவில் உதிர்த்துவிடுகிறாய்

தினமும்
பூக்கொத்தோடு நான்..

வன்முறை


நான் வரைந்த
வண்ணங்களுக்குள்
வன்முறை..

அருகில்
நீ

என்னவள்


புதுக்கவிதை!

மின்னியபடி
எதிர்வீட்டு மாடியில்

என்னவள் !

எச்சம்

குப்பைமேடுகளும்
குடை கேட்கின்றது..

பறவை
சிந்திய எச்சத்தில்
உயிர் வளரும்
இவ்வுலகில்..

வரம்

வராது

என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!

இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..

December 4, 2006

அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை

அப்போது-

வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.

வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.

இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.

இப்போது-

மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.

December 3, 2006

பசி







அவனுக்கு
உடம்பில்
அவளுக்கு
வயிற்றில்

பரிமாறிக்கொண்டார்கள்
.