அப்போதெல்லாம்
January 30, 2007
ஒர் தேவதை
அப்போதெல்லாம்
Posted by THOTTARAYASWAMY.A at 7:23 PM 1 comments
Labels: கவிதை
காத்துக்கொண்டிருந்தபோதுதான்
Posted by THOTTARAYASWAMY.A at 7:06 PM 0 comments
Labels: கவிதை
January 29, 2007
January 27, 2007
தொலைந்த தொப்புள் கொடி..
உறவுகள் தேடி
ஓடாய் தேய்த - ஒரு
உயிரின் ஓளமிது..
தொப்புள் கொடியை
தொலைத்த முதலே
தொலைவில் தெரியும்
தொலைந்த விடியலை - தேடும்
தோய்ந்த உயிரிது...
அம்மா என்றேன்
அம்மாவிடம் அல்ல
ஜய்யா என்றேன்
அப்பாவிடம் அல்ல
அண்ணா என்றேன்
அண்ணன் அங்கில்லை
அக்கா என்றேன்
அவளும் சொந்தமில்லை...
இருந்தும்
சில நொடி உறவுகள் -எனை
மெல்ல திண்ணத் துடிக்கும்
வயிற்று பசிக்காக....
பால் சோறு உண்டதில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
படுத்துறங்க தோளுமில்லை
விடைக்கான வழியுமில்லை
விடிந்தாலும்- எனக்கு
விடியலில்லை...
எஞ்சிய சோறும்
எச்சில் இலையும்
எப்போதும் எனக்காய்
எங்கேயும் காத்திருக்கவில்லை....
இவற்றை நம்பியே
இரவல் உயிரை
இன்னமும் வாழவைகிறேன்...
மாமனில்லை
மதனி இல்லை
தாத்தா பாட்டி
பார்த்ததில்லை....
இன்னும் கிடைக்காத
உறவுகளுக்கு
தெரியாத பெயர்கள்....
தாய்முகம் பார்ததில்லை
தாய்மொழியும் அறிந்ததில்லை
தகப்பனார் தெரியவில்லை
தாகம் தான் திறவில்லை...
அனாதை தனிமைக்குள்
அரசாலும் ராஜாவாய்
அண்ணமிட்ட ஆன்மாக்கள்
அன்றைய உறவுகளாய்..
குப்பை தொட்டிகள்
கோயில் மதில் சுவர்கள்
யாருமற்ற மணல் மேடுகள்
இவைகள்-
பெற்றெடுத்த
சிற்றரசர்கள்
சில்லறைக்காக - இன்னமும்
சிணுங்கிக்கொண்டு தான்
சீருகிறார்கள்....
ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்
உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னையும் தான்...
Posted by THOTTARAYASWAMY.A at 7:15 PM 4 comments
Labels: கவிதை
January 26, 2007
காகித கருவறைகள்
எனக்கு
எனக்கும்
வினாக்குறிகள்
என்
சாட்சி
Posted by THOTTARAYASWAMY.A at 12:15 PM 0 comments
Labels: கவிதை
January 24, 2007
அபாய அறிவிப்பு !
அபாய
Posted by THOTTARAYASWAMY.A at 9:23 PM 2 comments
Labels: கவிதை
January 23, 2007
இல்லாமையின் சுகம்
இளமை என்னை
காதல் என்னை
இப்படி
Posted by THOTTARAYASWAMY.A at 9:12 PM 0 comments
Labels: கவிதை
January 16, 2007
சொர்கத்தின் வாசலிலே..
அகால மரணம் எனை அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டதால்அழுது புலம்புகிறேன்,, சொர்கத்தின் வாசலிலே...
கதவுகள் இன்னும் திறக்கப்படவிலலை மனக்கவலை இன்னும் தீரவில்லை, பேருள்ளம் கொண்டவர்களே கொஞ்சம் நியாயத்தை சொல்லுங்கள்..
இரண்டு மாதத்துக்கு முன்னர் திருமணம் நிச்சியக்கபட்ட புதுமாப்பிள்ளை நான், இப்போது சொர்கத்தின் வாசலிலே..,
நிச்சயக்கபட்ட நாள் முதலே காதலர்களாய் கவிதை பாடிவந்தோம், என் வாழ்க்கை சக்கரத்தில் ஆரங்களாய் தாய்,தந்தை, ஓர் பாசமான தங்கை, அச்சானியாக வருங்காலத் துணைவி, இவர்களுக்காகவே வண்டியை ஓட்டும் பொருப்புள்ள சராசரி மனிதன் நான், எனக்கு ஏன் இத்த சோதனை..
என் நிச்சியத்தின் போதே, என் உணர்வுகளுக்கெல்லாம் தன் உதிரத்தை உரமாக்கியத் தாய், உயிரை எமனிடம் உயிலெழுதி வைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஒப்பற்ற உத்தமிக்காய் நிச்சியக்கப்பட்ட உள்ளங்களின் இணைப்பு இது..
எங்களை விட்டு பிரியும் வேலையிலும், ஓயாது உழைத்து கொண்டிருக்கும் தன்னலம் பாரா தாய் அவள்.நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும் விழி முடாது காத்திருக்கும் கருனை அவள். என் தந்தை ஒன்றும் சலைத்தவர் அல்ல, என் இதயக்கூட்டில் விடி வெள்ளியாய் வழிகாட்டும் கடவுள் அவர்.
என் சொர்வுகளுக்கெல்லாம் சொப்பனமாய், என் தங்கை. துள்ளித்திரியும் கடை முயல் குட்டி அவள்.என்னுள் இருந்த இரண்டாம் கவியை கண்டுணர்ந்தவள் காதலி, ஆம் எங்களின் இரண்டாம் தாய்..
இவ்வளவும் வாய்த எவனுக்கும் சொர்கம் பூமியிலே...
ஓர் மழைக் கால இரவு நேரம், அலுவலகத்திக்கு அவசர அலைப்பு, தாய் நம்மை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறாள்,,, உனை காண துடித்துக்கொண்டு..
அடித்து பிடித்து மொப்பட்டை எடுத்தேன், துக்கம் நெஞ்சை கனமாக்கியது,, தாயே கொஞ்சம் பொருத்துக்கொள் இதோ தலைமகன் புயலென புறப்படுகிறேன்.. கண்கள் மட்டும் சாலையில், எண்ணம் எல்லாம் தாய்மையில்..
காற்றும் மழையும் மின்னலுடன் போட்டியிட்டுக்கொண்டிருத்த்து,,,தாயே கொஞ்சம் பொருத்துக்கொள்.?
வெட்டிய மின்னல் ஒன்று, என் தலையில் தடவிக்கொடுத்தது..
அகால மரணம் அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டது...இப்போது சொர்கத்தின் வாசலிலே... அழுது புலம்புகிறேன் முகம் கானமுடியாத் தாயின் முகத்துக்கா,,
என் தாயை கண்டால் கொஞ்சம் அசுவாசப்படுத்துங்கள்..
தயவு செய்து நான் இங்கிருப்பதை சொல்லிவிடாதீர்கள்..
சரி நான் வருகிறேன்..
// சொர்கத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது.. அங்கே இருகரம் நீட்டி தாய் அவனை அழைத்து கொல்கிறாள்.
தாய்மை - தன்னலம் பாராத பாசவலை
காதலி - இன்னும் தாயகவில்லை //
Posted by THOTTARAYASWAMY.A at 7:24 PM 2 comments
Labels: சிறுகதை
January 13, 2007
அவளிடம் சொல்லிவிடதே
நமக்குள் மட்டும்...
மிதமான மின்னலும்
இதமான புயலும்
மனசுக்குள் மையம்
கொண்ட கார்காலம்...
மின்சாரம் இல்லாமல்
விளக்குள் இல்லாமல்
நம்மை சுற்றிவட்டமிடும்
இலட்சம் மின்மினிகள்..
கண்கள் மட்டும்
விழித்திருக்க
வழியெங்கும்
நானும் நீயும்
நம்மை தேடிக்கொண்ட
காதல் காலம்...
உன் மைவிழி
அடித்த தந்திகளை
தவறாமல் - என்
உயிர் மூச்சு
வாங்கிக்கொண்டதும்..
நான் அனுப்பிய
உன் நினைவுகளை
நீ வருடுவதும்..
நம்முள் வசந்தகாலம்.
சூடாகி தூளன-
நெஞ்சங்கள்
உயிரால் உரவாடிய
இதமான மழைக்காலம்..
எனக்காய்
என்னுள் வாழும்
என்னவளின்
நினைவே
அவளிடம்
சொல்லிவிடதே
எனக்கானவள்
நீயென்று..
Posted by THOTTARAYASWAMY.A at 7:56 PM 0 comments
Labels: கவிதை
January 11, 2007
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சியே..
என் உயிரிலிருந்து
உனை
விடுவித்துக் கொண்டாலும்
நீ பதித்த காச்சுவடுகள்
என் மனதிலிருந்து
மறைந்துவிட மறுக்கிறது..
நீ
பயணிக்கபோகும்தூரம்
எதுவாய் இருந்தாலும்
என் மனமகரந்தங்கள்
உன் கால்களில்
ஒட்டியே கிடக்கும்..
Posted by THOTTARAYASWAMY.A at 6:56 PM 0 comments
Labels: கவிதை
January 10, 2007
January 8, 2007
பருக்கள்....
கனவில் நேற்று
தொலைந்து போனேன்....
தெரியாத ஊரில்
தனியே நான்
தொலை தூரம்
நடந்துவிட்டேன் -ஆதாரமாய்
பாதத்தில்எண்ணற்ற
முற்கள்....
திடிரென என்னை
சுற்றிகூட்டம்
"நான் எங்கிருக்கிறேன்?
நீங்கள் யார்?"
பதில் ஒன்றும்
வரவில்லைஅவனிடம்
முகம் திருப்பிக்கொண்டான்
பின்பக்கம் கண்கள்
கவனிக்க தவறினேன்....
முன் உண்டோ கண்?
முயற்று பார்த்ததில்
குழந்தை ஒன்றிடம்
"ஊர் என்ன?
உன் பேரென்ன?"
என் கேள்வி -பதில்வருமுன்னே
எனை தேடிநான்கு பேர்......
தூக்கி சென்றுகிடத்தினர்
தனியே -
எனை சுற்றிவெளிச்சம்
அவர்கள்இருளாய்.....
அருகில் குழி பரிக்கப்பட்டது
மறுபடியும் அதேகேள்வி
பதில் இல்லை அவர்களிடம்
அவர்களே இனி பேசட்டும்....
குழியுனுள் நான்அவர்களே
இனி பேசட்டும்....
மண் மூடி புழுக்கள்
கன்னத்தை பதம்பார்கிறது
அவர்களே இனி பேசட்டும்....
கரையான் கால்
கட்டைவிரலை
அறிக்கின்றது
உத்ரி எழுந்து
கண்விழித்தேன்....
எதிரே கண்ணடி
முகத்தில் பருக்கள் !
Posted by THOTTARAYASWAMY.A at 8:00 PM 1 comments
Labels: கவிதை
ஜென்மம் ஏழுகொண்டேன்
நெற்றியில் பொட்டுமிட்டு
வெய்குழல் தாந்திருத்தி
வட்டக்கரிய விழி- கண்ணம்மா
எனை கட்டி இழுக்குதடி!
பட்டு துணியுடுத்தி
பாத சலங்கை நீபூட்டி
வெட்டும் மின்னலடி- கண்ணம்மா
உன் சுந்தர நடையழகு!
வண்ணக்குஞ்சம் கட்டி
வாரிமஞ்சள் நீபூசி
கொத்தும் பாம்படியோ- கண்ணம்மா
உன் பின்னல் ஜடையழகு!
மெத்த மத்தளமோ
எழில்மொத்தம் பின்னழகே
கொட்டும் முரசடியே - கண்ணம்மா
உன் முட்டும் முன்னழகே!
உனை தீண்டும் போதினிலே
நீ சுடும் தீஞ்கனலே
சொல்லும் மொழிகளிலே- கண்ணம்மா
தேன் தமிழ் மொழியழகே!
ஜென்மம் ஏழுகொண்டேன்
காதலை நெஞ்சில் கண்டேன்
சுத்தரி நீ இல்லையென்றால் -கண்ணம்மா
சொர்கத்தை அடைந்திடுவேன்!
Posted by THOTTARAYASWAMY.A at 7:21 PM 0 comments
Labels: கவிதை
மலடி
கவிதை தந்தை மட்டும்
என்
Posted by THOTTARAYASWAMY.A at 6:42 PM 0 comments
Labels: கவிதை
January 6, 2007
மீய்த்தெள
நான் மறைத்த
Posted by THOTTARAYASWAMY.A at 8:35 PM 1 comments
Labels: ஓவியம்/நிழற்படம், கவிதை
January 4, 2007
மகாத்மாவுக்காக அல்ல
சமுதாயம்
இருந்தும் மெளனமய்
கற்றுத்தந்த
என்னுள் கோட்சே
Posted by THOTTARAYASWAMY.A at 9:06 PM 0 comments
Labels: கவிதை
January 3, 2007
என் கண்மனி நீயடி
என்
Posted by THOTTARAYASWAMY.A at 7:54 PM 0 comments
Labels: கவிதை
தனிமையில்
நீ
இதழ்பிரிக்காமல்
உதிர்த்துவிடுகிறாய்
சொற்களை
உன் கண்களில்
தனிமையில்
சத்தமிட்டுக்கொள்கிறேன்
உன் பெயர்சொல்லி
நான்..
Posted by THOTTARAYASWAMY.A at 3:36 PM 1 comments
Labels: கவிதை