January 8, 2007

பருக்கள்....

னவில் நேற்று
தொலைந்து போனேன்....
தெரியாத ஊரில்
தனியே நான்

தொலை தூரம்
நடந்துவிட்டேன் -ஆதாரமாய்
பாதத்தில்எண்ணற்ற
முற்கள்....

திடிரென என்னை
சுற்றிகூட்டம்
"நான் எங்கிருக்கிறேன்?
நீங்கள் யார்?"
பதில் ஒன்றும்
வரவில்லைஅவனிடம்
முகம் திருப்பிக்கொண்டான்
பின்பக்கம் கண்கள்
கவனிக்க தவறினேன்....
முன் உண்டோ கண்?

முயற்று பார்த்ததில்
குழந்தை ஒன்றிடம்
"ஊர் என்ன?
உன் பேரென்ன?"
என் கேள்வி -பதில்வருமுன்னே
எனை தேடிநான்கு பேர்......

தூக்கி சென்றுகிடத்தினர்
தனியே -
எனை சுற்றிவெளிச்சம்
அவர்கள்இருளாய்.....

அருகில் குழி பரிக்கப்பட்டது
மறுபடியும் அதேகேள்வி
பதில் இல்லை அவர்களிடம்
அவர்களே இனி பேசட்டும்....

குழியுனுள் நான்அவர்களே
இனி பேசட்டும்....

மண் மூடி புழுக்கள்
கன்னத்தை பதம்பார்கிறது
அவர்களே இனி பேசட்டும்....

கரையான் கால்
கட்டைவிரலை
அறிக்கின்றது

உத்ரி எழுந்து
கண்விழித்தேன்....

எதிரே கண்ணடி
முகத்தில் பருக்கள் !

1 comment:

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.