March 29, 2008

தினம் என் சோலையில் பூக்கள்

நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்

பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.

இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்...

March 4, 2007

இசையானவள்


சுரங்களுக்கே
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு

சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..

February 11, 2007

தனியாய்..

அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை

என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்

தனியாய் அழுததுண்டு
தனிமையில்..

February 6, 2007

கொன்றுவிடு என்னை

இப்போதே
என்னைகொன்றுவிடு..

தினம் தினம்
உன் விழி போர்படைகள்
புடைத்தெடுத்துவிடுகின்றன.

உயிரை
ஒழித்துவைத்துக்கொண்டு
பார்க்க வேண்டியதாய் உள்ளது
உன்னை.

February 5, 2007

மனிதன்

மன்னிப்பவன்
மனிதன்

மன்னிப்புகேட்க
நினைப்பவன்
பெரியமனிதன்.

February 4, 2007

யாரிடமும் சொல்லிவிடாதே

கடவுளிடம் மன்றாடி
வரமொன்று பெற்று
பெண்ணாய்
பூமிக்குவந்தது
மேகமொன்று..

எங்கெங்கோ வாழ்ந்து
புகழாரம் சூட்டிய
அழகோடு
என்னவள் வசிக்கும்
ஊருக்கு வந்தது..

வழியில்
அவளைகண்டபோது
அவளழகில் மயங்கி-
பின் நாணி
கடவுகளை அடைந்தது..

அவளை விட
அழகாய் மீண்டும்
தருவிக்க சொன்னது
மேகம்.

உலகில்
அவளுக்கு இணையாய்
இன்னொரித்தியை
பிரசுவிக்க முடியாது
இருந்தாலும்
நீ இரண்டாம் அழகி..

என்றாறம் கடவுள்.

தன் ஆசை விடுத்து
மீண்டும் மேகமானது
மேகம்..

இப்போதும்
நிறைவேராத
ஆசை எண்ணி
அழுது வடிக்கின்றது
கண்ணீரை
மழையாய்..

ஒரு மழைகால நேரத்தில்
என் காதோடு
சொல்லிச்சென்றது
மேகம்
யாரிடமும் சொல்லிவிடாதே
என்று.

February 2, 2007

கட்டுண்டு

கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்

முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை

அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!