January 13, 2007

அவளிடம் சொல்லிவிடதே


நமக்குள் மட்டும்...

மிதமான மின்னலும்
இதமான புயலும்
மனசுக்குள் மையம்
கொண்ட கார்காலம்...

மின்சாரம் இல்லாமல்
விளக்குள் இல்லாமல்
நம்மை சுற்றிவட்டமிடும்
இலட்சம் மின்மினிகள்..

கண்கள் மட்டும்
விழித்திருக்க
வழியெங்கும்
நானும் நீயும்
நம்மை தேடிக்கொண்ட
காதல் காலம்...

உன் மைவிழி
அடித்த தந்திகளை
தவறாமல் - என்
உயிர் மூச்சு
வாங்கிக்கொண்டதும்..
நான் அனுப்பிய
உன் நினைவுகளை
நீ வருடுவதும்..
நம்முள் வசந்தகாலம்.

சூடாகி தூளன-
நெஞ்சங்கள்
உயிரால் உரவாடிய
இதமான மழைக்காலம்..

எனக்காய்
என்னுள் வாழும்
என்னவளின்
நினைவே

அவளிடம்
சொல்லிவிடதே
எனக்கானவள்
நீயென்று..

No comments: