January 4, 2007

மகாத்மாவுக்காக அல்ல


தோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..

சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..

இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..

கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல

என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..

No comments: