January 23, 2007

இல்லாமையின் சுகம்


வறுமை என்னை
வாரிக்கொண்டபோதுதான்
பசியின் அருமை தெரிந்தேன்..

இளமை என்னை
கடந்தபோதுதான்
முதுமையின் வலிமை அறிந்தேன்..

காதல் என்னை
வெறுத்தபோதுதான்
அன்பின் தாக்கம் புரிந்தேன்..

இப்படி
எல்லாவற்றையும்
இழந்தபோதுதான்
இல்லாமையின்
சுகமறிந்தேன்.!

No comments: