December 4, 2006

அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை

அப்போது-

வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.

வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.

இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.

இப்போது-

மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.

2 comments:

ecr said...

சரியாக பாருங்கள் அவை

சில்லறை காசுகள் அல்ல

செல்லாக்காசுகள்!

Anonymous said...

அற்புதம்... (என்பது இந்தக் கவிதைக்கான புகழ்மொழியில் கடைசி)

வாழ்த்துக்கள்... !!