September 19, 2006

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...

க(வி)தை..
------------
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்யாணத்திற்காக
ஆட்டோவில்..

இன்னும் பதினைந்து
நிமிடத்தில் கோயிலுக்கு
சென்றவுடன்
எனக்கும்
அவளுக்கும்
கல்யாணம்..

சந்தோசக் சிறகுகள்
செதில் செதிலாய்
வளர்ந்துகொண்டிருந்தது
என்னுள்..
என்னடா இது
நடுரோட்டில்
இவ்வளவு கூட்டம்..

ஆம் கண்டிப்பாக
விபத்தாகத்தான்
இருக்கவேண்டும்..

என் ஊகம்
சரியானதாகமாறியது...

ரத்த வெள்ளத்தில்
சின்ன சிறு
பள்ளிக் குழந்தை
மரணத்திடம் நடுரோட்டில்
மன்றாடிக்கொண்டிருந்தது...

சுற்றி இருந்தவர்கள்
பதரிக்கொண்டிருந்தனர்...

அட செ..மனிதனா நான்
அதை விலகி சென்றால்..

இல்லை மனிதநேயம்
மிக்க மனிதன் நான்..

நான் வந்தஆட்டோவை
குழந்தைக்குகொடுத்து விட்டு
நடுரோட்டில்நின்றிருந்தேன்..

விலகிய கூட்டம்
என்னை பெருமையாக
பார்த்தது..

உயிரை காப்பாற்றி
விடுவோம் என்ற
நம்பிக்கை
எனக்காக
காத்துக்கொண்டிருந்த
என் வருக்கால மனைவியை
ஞாபகப்படுத்தியது...

நல்லவேலை
அந்த வழியே
ஓர் ஆட்டோ
தேடி வந்தது..

செல்லும் இடத்தை
சொல்லி நிம்மதியாய்
கண் அயர்ந்தேன்..

இன்னும் சிறிதுநேரத்தில்
போய்சேர்ந்து விடுவேன்
கோயிலுக்கு..

அப்போது..
என்ன பெரும் சத்தம்
நான் போய்கொண்டிருந்த
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது...

எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..
கோனளாக..

அதில் பயணித்த
ஓட்டுனரும்
நானும்இறந்துக்கிடக்கிறோம்..

அப்போது..நான்..

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.

1 comment:

Anonymous said...

தொட்டராயசுவாமி, உங்கள் படைப்பை வாசித்ததில் எனக்குப் பிடித்தது...