September 26, 2006

மனிதனுக்காக அல்ல...

நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்னை சுற்றி இவ்வளவு
கூட்டம்..
நான்
என்ன சொல்லிவிட்டேன்
என்று நாற்காலி
வனப்பில்ஒய்யாராமய்
நான்..
நான்
எங்கே போகிறேன்
என்றுவண்ணம்
தரித்த பல்லாக்கு
முன் எல்லோரும்...

நிருத்துங்கள்
இந்த
கோமாளித்தனத்தை...
வாசியுங்கள் - என்
மரண வாக்கு மூலத்தை..

மகாத்மாக்களுக்கு
இடையில்-எனை
புதைத்து விடாதீர்கள்
ஜாபாவான்களுக்கு
மேல் வைத்து
எரித்துவிடாதீர்கள்..

மலை உச்சிமேல்
இருந்துஉருட்டி விடுங்கள்
பிணம் திண்ணும்
கழுகளுக்கு இறையாகுகிறேன்..

வழி நெடுக
மலர் தூவி
வண்டுகளை
பட்டினி போடாதீர்..

சதையருது
குளத்தில்இடுங்கள்
மீன்கள் பசியாரட்டும்..

மிஞ்சிய எழும்பை
நாய்களுக்கிடுங்கள்
நன்றியாவது காட்டட்டும்..

நான்இறந்தபின்னும்
பசியாற்ற நினைக்கிறேன்...

மனிதனுக்காக அல்ல...

No comments: