November 27, 2006

சிவப்பு செதில்கள்


கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..

மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..

உனக்கும்
எனக்குமான
தூரம் - துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..

தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்

என்னை சுற்றி
மின்னல் - உன்
கண்கள் சுற்றி
மழை

நம்மை சுற்றி
வெளி..

No comments: