November 28, 2006

ஆணவம்

அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..

பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..

அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..

பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..

தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு

கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..

பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..

கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..

விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..

விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...

அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..

என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..

தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...

1 comment:

இவன் said...

அழுத்தமான கவிதை!

இந்த புகைபடத்தை எங்கிருந்து பிடித்தீர்?

-இவன்.