அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை
என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய் அழுததுண்டு
தனிமையில்..
February 11, 2007
தனியாய்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
5:13 PM
0
comments
Labels: கவிதை
February 6, 2007
கொன்றுவிடு என்னை
இப்போதே
என்னைகொன்றுவிடு..
தினம் தினம்
உன் விழி போர்படைகள்
புடைத்தெடுத்துவிடுகின்றன.
உயிரை
ஒழித்துவைத்துக்கொண்டு
பார்க்க வேண்டியதாய் உள்ளது
உன்னை.
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:18 PM
0
comments
Labels: கவிதை
February 5, 2007
மனிதன்
மன்னிப்பவன்
மனிதன்
மன்னிப்புகேட்க
நினைப்பவன்
பெரியமனிதன்.
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:21 PM
0
comments
Labels: கவிதை
February 4, 2007
யாரிடமும் சொல்லிவிடாதே
கடவுளிடம் மன்றாடி
வரமொன்று பெற்று
பெண்ணாய்
பூமிக்குவந்தது
மேகமொன்று..
எங்கெங்கோ வாழ்ந்து
புகழாரம் சூட்டிய
அழகோடு
என்னவள் வசிக்கும்
ஊருக்கு வந்தது..
வழியில்
அவளைகண்டபோது
அவளழகில் மயங்கி-
பின் நாணி
கடவுகளை அடைந்தது..
அவளை விட
அழகாய் மீண்டும்
தருவிக்க சொன்னது
மேகம்.
உலகில்
அவளுக்கு இணையாய்
இன்னொரித்தியை
பிரசுவிக்க முடியாது
இருந்தாலும்
நீ இரண்டாம் அழகி..
என்றாறம் கடவுள்.
தன் ஆசை விடுத்து
மீண்டும் மேகமானது
மேகம்..
இப்போதும்
நிறைவேராத
ஆசை எண்ணி
அழுது வடிக்கின்றது
கண்ணீரை
மழையாய்..
ஒரு மழைகால நேரத்தில்
என் காதோடு
சொல்லிச்சென்றது
மேகம்
யாரிடமும் சொல்லிவிடாதே
என்று.
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:07 PM
0
comments
February 2, 2007
கட்டுண்டு
கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்
முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை
அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:41 PM
1 comments
Labels: கவிதை
நீயிருக்கும் தூரத்தில்
மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் - நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா.
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:33 PM
0
comments
Labels: கவிதை