November 29, 2006

பக்தர்கள்

வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

வல்லவன்

விட்டில் பூச்சி

வாழ்க்கையில்

வெளிச்சத்தை
துணையாக்குபவன்
புத்திசாலி

இருட்டில்
நடக்க பழகியவன்
அனுபவசாலி

அங்கேயே
அமர்ந்து கொண்டவன்
முட்டாள்

முன்னவனை
பின்னவன்
மிஞ்சினாலும்

வல்லவனுக்கு
வல்லவன் உண்டு
வையகத்தில்..

November 28, 2006

ஆணவம்

அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..

பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..

அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..

பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..

தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு

கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..

பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..

கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..

விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..

விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...

அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..

என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..

தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...

November 27, 2006

சிவப்பு செதில்கள்


கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..

மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..

உனக்கும்
எனக்குமான
தூரம் - துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..

தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்

என்னை சுற்றி
மின்னல் - உன்
கண்கள் சுற்றி
மழை

நம்மை சுற்றி
வெளி..

September 26, 2006

தன்னலதாயின் உறவுகளில்..

தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு

தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்

மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் - நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்

தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர...

ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே

மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்....

உறவுகள் ஊருக்காக...

அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது

உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது.......

சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்

பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்

தபால்காரரின்
வசதிக்காக....!

உறவுகள்
ஊருக்காக...

தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...

எப்போதவது
கிடைக்கக்கூடும்....

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...