வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை
அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை
ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்
மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது
மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்
கடவுள் முன்
பக்தர்கள்,,,
November 29, 2006
பக்தர்கள்
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:56 PM
1 comments
Labels: கவிதை
வல்லவன்
வெளிச்சத்தை
இருட்டில்
அங்கேயே
முன்னவனை
வல்லவனுக்கு
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:51 PM
0
comments
Labels: கவிதை
November 28, 2006
ஆணவம்
அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:38 PM
1 comments
Labels: கவிதை
November 27, 2006
சிவப்பு செதில்கள்
மடிந்து ஒடிந்தது
உனக்கும்
தொட்டுக்கொண்டது
என்னை சுற்றி
நம்மை சுற்றி
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:14 PM
0
comments
Labels: கவிதை
September 26, 2006
தன்னலதாயின் உறவுகளில்..
தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு
தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்
மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் - நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்
தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர...
ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே
மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்....
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:54 PM
0
comments
Labels: கவிதை
உறவுகள் ஊருக்காக...
அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது
உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது.......
சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்
பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்
தபால்காரரின்
வசதிக்காக....!
உறவுகள்
ஊருக்காக...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:50 PM
0
comments
Labels: கவிதை
தாய்மடி வாசம்
தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...
எப்போதவது
கிடைக்கக்கூடும்....
அதுவரை
பொரு மனமே..
தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....
எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:41 PM
0
comments
Labels: கவிதை

