
நெற்றியில் பொட்டுமிட்டு
வெய்குழல் தாந்திருத்தி
வட்டக்கரிய விழி- கண்ணம்மா
எனை கட்டி இழுக்குதடி!
பட்டு துணியுடுத்தி
பாத சலங்கை நீபூட்டி
வெட்டும் மின்னலடி- கண்ணம்மா
உன் சுந்தர நடையழகு!
வண்ணக்குஞ்சம் கட்டி
வாரிமஞ்சள் நீபூசி
கொத்தும் பாம்படியோ- கண்ணம்மா
உன் பின்னல் ஜடையழகு!
மெத்த மத்தளமோ
எழில்மொத்தம் பின்னழகே
கொட்டும் முரசடியே - கண்ணம்மா
உன் முட்டும் முன்னழகே!
உனை தீண்டும் போதினிலே
நீ சுடும் தீஞ்கனலே
சொல்லும் மொழிகளிலே- கண்ணம்மா
தேன் தமிழ் மொழியழகே!
ஜென்மம் ஏழுகொண்டேன்
காதலை நெஞ்சில் கண்டேன்
சுத்தரி நீ இல்லையென்றால் -கண்ணம்மா
சொர்கத்தை அடைந்திடுவேன்!
January 8, 2007
ஜென்மம் ஏழுகொண்டேன்
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:21 PM
0
comments
Labels: கவிதை
மலடி
என் பேனா மனைவி
பெற்றெடுத்த குழந்தைகளில்
பிழை ஏற்பட்டால்
அழிக்க முற்படுவதில்லை
திருத்தவே முயல்கிறேன்..
கவிதை தந்தை மட்டும்
தன் படைப்புகளை
எனக்கு
புலப்படாமல் வைத்திருந்தால்
என்
பேனா மனைவி
இன்னமும் மலடியாகத்தான்
இருந்திருப்பாள்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
6:42 PM
0
comments
Labels: கவிதை
January 6, 2007
மீய்த்தெள
என்னுள்
கருப்பு காலங்கள்
மனசுடன்
மல்லுக்கு நிற்கிறது..
நான் மறைத்த
குற்றத்திற்காக அல்ல
மீய்த்தெள வேண்டி..
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:35 PM
1 comments
Labels: ஓவியம்/நிழற்படம், கவிதை
January 4, 2007
மகாத்மாவுக்காக அல்ல
தோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..
சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..
கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல
என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:06 PM
0
comments
Labels: கவிதை
January 3, 2007
என் கண்மனி நீயடி
இப்போதெல்லாம்
யாரையும் நிமிர்ந்து
பார்பதில்லை நான்..
என்
கண்களை பார்த்தே
உன்னை
கண்டுபிடித்துவிடுவார்கள்
என்று..
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:54 PM
0
comments
Labels: கவிதை
தனிமையில்
நீ
இதழ்பிரிக்காமல்
உதிர்த்துவிடுகிறாய்
சொற்களை
உன் கண்களில்
தனிமையில்
சத்தமிட்டுக்கொள்கிறேன்
உன் பெயர்சொல்லி
நான்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
3:36 PM
1 comments
Labels: கவிதை
Subscribe to:
Posts (Atom)




