உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை
தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் - நீ !
December 20, 2006
December 19, 2006
சூட மலர்ந்தது நிலா
என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..
அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..
இதைவிட சிறப்பாய்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
6:53 PM
0
comments
Labels: கவிதை
December 18, 2006
இவைகளுக்காய்
நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..
ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..
முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...
இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:22 PM
1 comments
Labels: கவிதை
அடைக்கும் தாள்
இப்போது-
இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு...
காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..
இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:04 PM
0
comments
Labels: கவிதை
December 17, 2006
வெறியாட்டம்
வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..
கருவறைக்குள்
கைகலப்பு..
இரட்டையர்களுக்குள்
மேலும்
Posted by
THOTTARAYASWAMY.A
at
5:33 PM
0
comments
Labels: கவிதை
December 16, 2006
தொடர்விருச்சம்
உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?
உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!
அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்
இப்போது
தேடுகிறேன்
தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:18 PM
0
comments
Labels: கவிதை
December 15, 2006
உடைத்துவிடாதே..
என்
கனவு குமிழ்களை
கலையாமல்
அனுப்பிவைகிறேன்..
ரசித்துப்பார்
மறந்தும் கூட
உடைத்துவிடாதே..
உன் உயிர்
அதிலுள்ளது..
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:10 PM
0
comments
Labels: கவிதை
December 14, 2006
December 13, 2006
வரம்
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:24 PM
0
comments
Labels: கவிதை
December 4, 2006
அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை
அப்போது-
வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.
வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.
இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.
இப்போது-
மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:53 PM
2
comments
Labels: கவிதை
December 3, 2006
November 29, 2006
பக்தர்கள்
வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை
அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை
ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்
மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது
மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்
கடவுள் முன்
பக்தர்கள்,,,
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:56 PM
1 comments
Labels: கவிதை
வல்லவன்
வெளிச்சத்தை
இருட்டில்
அங்கேயே
முன்னவனை
வல்லவனுக்கு
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:51 PM
0
comments
Labels: கவிதை
November 28, 2006
ஆணவம்
அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:38 PM
1 comments
Labels: கவிதை
November 27, 2006
சிவப்பு செதில்கள்
மடிந்து ஒடிந்தது
உனக்கும்
தொட்டுக்கொண்டது
என்னை சுற்றி
நம்மை சுற்றி
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:14 PM
0
comments
Labels: கவிதை
September 26, 2006
தன்னலதாயின் உறவுகளில்..
தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு
தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்
மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் - நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்
தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர...
ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே
மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்....
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:54 PM
0
comments
Labels: கவிதை
உறவுகள் ஊருக்காக...
அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது
உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது.......
சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்
பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்
தபால்காரரின்
வசதிக்காக....!
உறவுகள்
ஊருக்காக...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:50 PM
0
comments
Labels: கவிதை
தாய்மடி வாசம்
தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...
எப்போதவது
கிடைக்கக்கூடும்....
அதுவரை
பொரு மனமே..
தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....
எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:41 PM
0
comments
Labels: கவிதை
எதுவோ அதுவே,,
எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...
எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது
எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:38 PM
0
comments
Labels: கவிதை
படுக்கையில் நான்...
படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்
படுக்கையில்
நான்
கண்ணாடியில்
கையில்
காணவில்லை
பல் துலக்கி
படுக்கையில்
நான்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:29 PM
0
comments
எனக்காய்
எனக்காய்
ஏங்குகிறது..
பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்
மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்
இருந்தும்
நடை பிணமாய்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:25 PM
0
comments
Labels: கவிதை
மனிதனுக்காக அல்ல...
நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்னை சுற்றி இவ்வளவு
கூட்டம்..
நான்
என்ன சொல்லிவிட்டேன்
என்று நாற்காலி
வனப்பில்ஒய்யாராமய்
நான்..
நான்
எங்கே போகிறேன்
என்றுவண்ணம்
தரித்த பல்லாக்கு
முன் எல்லோரும்...
நிருத்துங்கள்
இந்த
கோமாளித்தனத்தை...
வாசியுங்கள் - என்
மரண வாக்கு மூலத்தை..
மகாத்மாக்களுக்கு
இடையில்-எனை
புதைத்து விடாதீர்கள்
ஜாபாவான்களுக்கு
மேல் வைத்து
எரித்துவிடாதீர்கள்..
மலை உச்சிமேல்
இருந்துஉருட்டி விடுங்கள்
பிணம் திண்ணும்
கழுகளுக்கு இறையாகுகிறேன்..
வழி நெடுக
மலர் தூவி
வண்டுகளை
பட்டினி போடாதீர்..
சதையருது
குளத்தில்இடுங்கள்
மீன்கள் பசியாரட்டும்..
மிஞ்சிய எழும்பை
நாய்களுக்கிடுங்கள்
நன்றியாவது காட்டட்டும்..
நான்இறந்தபின்னும்
பசியாற்ற நினைக்கிறேன்...
மனிதனுக்காக அல்ல...
Posted by
THOTTARAYASWAMY.A
at
6:30 PM
0
comments
Labels: கவிதை
September 19, 2006
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...
க(வி)தை..
------------
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்யாணத்திற்காக
ஆட்டோவில்..
இன்னும் பதினைந்து
நிமிடத்தில் கோயிலுக்கு
சென்றவுடன்
எனக்கும்
அவளுக்கும்
கல்யாணம்..
சந்தோசக் சிறகுகள்
செதில் செதிலாய்
வளர்ந்துகொண்டிருந்தது
என்னுள்..
என்னடா இது
நடுரோட்டில்
இவ்வளவு கூட்டம்..
ஆம் கண்டிப்பாக
விபத்தாகத்தான்
இருக்கவேண்டும்..
என் ஊகம்
சரியானதாகமாறியது...
ரத்த வெள்ளத்தில்
சின்ன சிறு
பள்ளிக் குழந்தை
மரணத்திடம் நடுரோட்டில்
மன்றாடிக்கொண்டிருந்தது...
சுற்றி இருந்தவர்கள்
பதரிக்கொண்டிருந்தனர்...
அட செ..மனிதனா நான்
அதை விலகி சென்றால்..
இல்லை மனிதநேயம்
மிக்க மனிதன் நான்..
நான் வந்தஆட்டோவை
குழந்தைக்குகொடுத்து விட்டு
நடுரோட்டில்நின்றிருந்தேன்..
விலகிய கூட்டம்
என்னை பெருமையாக
பார்த்தது..
உயிரை காப்பாற்றி
விடுவோம் என்ற
நம்பிக்கை
எனக்காக
காத்துக்கொண்டிருந்த
என் வருக்கால மனைவியை
ஞாபகப்படுத்தியது...
நல்லவேலை
அந்த வழியே
ஓர் ஆட்டோ
தேடி வந்தது..
செல்லும் இடத்தை
சொல்லி நிம்மதியாய்
கண் அயர்ந்தேன்..
இன்னும் சிறிதுநேரத்தில்
போய்சேர்ந்து விடுவேன்
கோயிலுக்கு..
அப்போது..
என்ன பெரும் சத்தம்
நான் போய்கொண்டிருந்த
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது...
எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..
கோனளாக..
அதில் பயணித்த
ஓட்டுனரும்
நானும்இறந்துக்கிடக்கிறோம்..
அப்போது..நான்..
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.
Posted by
THOTTARAYASWAMY.A
at
1:41 PM
1 comments
Labels: கவிதை
August 23, 2006
மரணம் மாண்டுபோனது...
மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரணத்தில்
பிரபஞ்சத்தில்
உரக்கக்கூறி
வெடித்து சிதறியது
பூமி.....
"மாற்றம்ஒன்றேமாறாதது...."
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:26 PM
0
comments
Labels: கவிதை
குப்பைத் தொட்டி...
காதலும்
காமமும்
குப்பைத் தொட்டிகளில்
சங்கமித்துக்கொள்வாதால்
அங்கேயே பெற்றெடுத்து
விட்டுவிடுகிறது...
குப்பைத்தொட்டியில்
குழந்தை...
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:23 PM
0
comments
Labels: கவிதை
களம்.....
போர் களக்
குருதிக் குளங்களில்
எப்போதும்
சின்னஞ்சிறுமொட்டுக்கள்
தன்வேர்களை
ஊன்றிக்கொள்ள
மரணப்போராட்டத்தை
களங்களுக்கு நடுவே
நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன....
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:37 PM
0
comments
Labels: கவிதை